இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவராக போகும் தூத்துக்குடி திருநங்கை

Default Image

இந்தியாவின் முதல்  திருநங்கை மருத்துவராக போகும் முதல் திருநங்கை தூத்துக்குடியை சேர்ந்த தாரிகா பானு. இவர் சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தவர். தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியது முதலில் இவர்தான்.

பள்ளிப்படிப்பை தொடர்ந்து இவர் மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞர் சஜீவ் குமார் ஆஜரானார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இடஒதுக்கீடு அடிப்படையில் இடம் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்