மு.க.அழகிரிக்கு முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைவைக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் கருணாநிதியின் மூத்த மகனும் தனக்கு கட்சியில் இடம் வேண்டும் நீண்ட நநாட்களாக போராடி வந்தார்.பின்னர் சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.
இதன் பின்னர் மு.க.அழகிரி கூறுகையில், “மதுரையில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆவின் பால் பண்ணை அருகே சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது.
ஆனால் ஸ்டாலினுக்கு முன்பாக மு.க.அழகிரி திட்டம் தீட்டி வந்தார்.தற்போதைய நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்படும் சிலை தான் முழுவீச்சில் தயாராகி வருகிறது.மு.க.அழகிரி வெறும் திட்டமாக மட்டுமே வைத்துள்ளார்.அவரது சிலை திட்டம் உறுதியாக எப்போது வெளியாகும் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…