ஆழ்வார் திருநகரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.! நள்ளிரவில் பரபரப்பு..!

Published by
Dinasuvadu desk

ஆழ்வார் திருநகர், ஸ்ரீ லட்சுமி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் விருகம்பாக்கம் இளங்கோ நகரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு 12 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுந்தர் வீட்டின் மீது இரண்டு மண்எண்ணை குண்டுகளை வீசினர்.

இதில் மண்எண்ணை குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்த ஜன்னல் திரை தீயில் எரிந்து நாசமானது. சத்தம் கேட்டு சுந்தர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்தனர்.

உடனே மண்எண்ணை குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் வரும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நேற்று காலை பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் சுந்தர் புகார் செய்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் சுந்தர் வீட்டில் மண்எண்ணை குண்டுகளை வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே மண்எண்ணை குண்டுகளை வீசியது அதே பகுதியை சேர்ந்த ரவுடி தக்காளி என்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Recent Posts

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…

54 seconds ago

களைகட்டும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…

11 mins ago

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்..! 2000 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசாங்கம் அறிவிப்பு!

லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால்…

30 mins ago

அதிரும் மெரினா..! அனல் பறக்க போகும் விமான சாகச நிகழ்ச்சி 2024!

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற…

46 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு., ஹரியானா சட்டமன்ற தேர்தல் நிலவரம் இதோ.,

ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு ,  காஷ்மீரில் 3 கட்டங்களாக…

48 mins ago

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago