சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நூறு நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நூறாவது நாளில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இது சோதனை முயற்சிதான் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் எச்சரித்தார். இதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் கூறினார். மேலும், இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசியவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறியதை, தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…