ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்…!!

Default Image

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நூறு நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நூறாவது நாளில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், இது சோதனை முயற்சிதான் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் எச்சரித்தார்.  இதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் கூறினார். மேலும், இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசியவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறியதை, தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்