ஆளுநர் தன் அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் : ப.சிதம்பரம் டிவிட்

Default Image

தமிழ்நாட்டில், மாவட்டவாரியாக பல இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  சென்று ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ஆளுங்கட்சியை தவிர்த்து,மற்ற அனைத்து கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் சட்டப்படியே ஆய்வு நடக்கிறது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இது பற்றி மேலும் தெரிவிக்கையில், கவர்னரின் வேலைகளை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி குற்றமாகும் எனவும் ஆளுநர் மாளிகையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்து, முன்னாள் மத்திய மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டரில், தமிழக ஆளுநரின் அறிக்கையானது வேடிக்கையாக இருக்கிறது. அரசு அதிகாரத்தில் ஆளுநர் பதவி பெயரளவில் மட்டுமே இருக்கும். மேலும், முழு தலைமை அதிகாரமும் முதல் அமைச்சரிடம் மட்டுமே இருக்கும் எனேவும், முதலமைச்சர், மத்திய அரசின் மீது கொண்டுள்ள அச்சத்தினால்தான் ஆளுநர் தனது அதிகாரத்தினையும் தாண்டி  செயல்படுகிறார்.

தமிழக முதலமைச்சர் தனக்குள்ள அதிகாரத்தின்படி, ஆளுநரின் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்கும்படி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்