ஆந்திரா, ராஜஸ்தானை போல் தமிழக அரசும் பெட்ரோல் விலையை குறைக்கலாம் …!தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர்

Default Image

தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று  தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 24 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.

Related image

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்க வலியுறுத்திவருகின்றனர்.

தற்போது இது தொடர்பாக  தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர் முரளி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழக அரசுவரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் மீதான விலை குறையும். ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைப்போல் தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும் என்று  தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்