ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும்-தமிழக அரசு அறிவிப்பு

Default Image

தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்