ஆசிரியை திட்டியதால் மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி…!
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருகே ஜமுனாமரத்தூரில் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ஆசிரியை திட்டியதால் 3 மாணவிகளும் விஷம் குடித்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.பின்னர் 3 மாணவிகளுக்கும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.