ஆகஸ்ட் 16ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த 484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் !கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரும் 16ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த 484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 11ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 13ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெறுதல், 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல் 17ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நிறுத்தப்பட்டிருந்த 484 கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.