“அவன் நான் இல்லை” என்று மீண்டும் நழுவிய ஹெச்.ராஜா..!!

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா காவல், நீதித்துறைகளை கடுமையாக வசைபாடியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.அதற்காக தமிழகத்தில் பல இடங்களில் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.அது மட்டுமில்லாமல் காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு  கட்டுப்பாடுகள் விதித்தனர்.

இந்நிலையில் புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.Image result for ஹெச்.ராஜா

அந்த இடத்தில் நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக   மிரட்டும் தொனியில் பேசிய ஹெச்.ராஜாவின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஹெச்.ராஜாவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து  ஹெச்.ராஜா அதில்  உள்ள குரல் என்னுடையது அல்ல; யாரோ என்னுடைய வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்!” என்று மீண்டும் பல்டியடித்துள்ளார்.

DINASUVADU 

ஹெச்.ராஜாவின் வீடியோ கீழே :

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்