அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

Default Image

2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அவனியாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, திருப்பரங்குன்றம் அருகேயுள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
போட்டியில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் , 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், மோட்டார் பைக், பிரிட்ஜ், வாசிங் மிஷின் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்