தமிழகத்தில் அடுத்த ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஏற்கனவே அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் ஸ்மிதா, என்ஜினீயர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கப்புகள் போன்றவற்றை புதுவையில் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான வழிமுறைகள், சட்ட வழிகள் மற்றும் மாற்றுப்பொருட்களின் உற்பத்தி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர்கள் பரிசோதனை நடத்தி அத்தகைய பொருட்கள் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட் களின் உபயோகத்தை தடை செய்வதற்கான செயல் திட்டத்தை 15 நாட்களில் அளிப்பதாக துறை செயலாளர் பார்த்திபன் தெரிவித்தார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…