அரசியல் தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும்..!!சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக…!!உள்ளதுஉயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி..!!

Published by
kavitha

அந்தகால அரசியல் தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தது என்றும், ஆனால் தற்போது சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் முன்ஜாமீன் கோரி, சீமான் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி கிருஷ்ணவள்ளி, அந்தக்கால தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது என்றார். ஆனால் தற்போது சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

சீமான் பேச்சை கேட்க நேரும் போது தான் விலகி சென்றுவிடுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.  தலைவர்கள் உணர்ச்சியை தூண்டும்விதமாக பேசிவிட்டு ஏசி அறைக்கு சென்று விடுவார்கள் என்று கூறிய நீதிபதி ஆனால் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள் தான் எனவும்  கருத்து தெரிவித்தார். அதே சமயம் சீமான் உள்ளிட்ட ஆறு பேரை மே 30ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என திருச்சி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

15 minutes ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

3 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

3 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

5 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

5 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

5 hours ago