அம்மன் கோவிலில் திருடிய கொள்ளையன் இறுதியில் அம்மனுக்கு 50 ரூபாய் காணிக்கை!

Default Image

அம்மன் கோவிலில் திருடிய கொள்ளையன் இறுதியில் அம்மனுக்கு 50 ரூபாய் காணிக்கை வைத்து சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குலசேகரம் ஸ்ரீ கிருஷ்ணா பால விருந்தாலைய கோவிலை முன்னாள் எம்எல்ஏ அப்பு நடேசன் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் அங்கு எந்த பதற்றமும் இன்றி சுமார் 3 மணி நேரமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவிலை சுற்றி உள்ள 7 உண்டியல்களையும் உடைத்து சில்லறையை கொட்டிவிட்டி அதில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் திருடியதாகவும் இறுதியில் கிருஷ்ணர் விக்கிரகம் முன் 50 ரூபாய் நோட்டை மட்டும் காணிக்கை வைத்து விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்