அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்!

Default Image

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தில் ,அவர்  நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நான்கு நாட்களாக உண்ணவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து அமைச்சர் செங்கோட்டையன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். சென்னையில் போராட்டம் முடிந்து ஊர் திரும்பும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வசதியாக, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு போலீசாரே பேருந்துகளை ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்