அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முறைகேடு ..!ஒரே மேடையில் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார்….!பொய் புகாராக இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்…!திமுக அதிரடி

Default Image

அமைச்சர் வேலுமணிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சவால் விடுத்துள்ளார்.

திமுக சார்பில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் வேலுமணி  மீது தொடர்ந்த வழக்கில் ,தமிழக அரசின் கஜானாவை, தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் நிறுவனங்கள் மூலம், அப்படியே ‘ஹைஜாக்’ செய்து கொள்ளையடித்து வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் தி.மு.கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .அதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரின் மீதும் தி.மு.க.வின் சார்பில் ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

Image result for அமைச்சர் வேலுமணி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வேலுமணி பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது.அதிமுக அரசை கலைக்க வேண்டும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன என்றும் தெரிவித்தார்.

Image result for அமைச்சர் வேலுமணி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

இந்நிலையில்  அமைச்சர் வேலுமணிக்கு திமுக அமைப்புச் செயலாளர்   ஆர்.எஸ். பாரதி சவால் விடுத்துள்ளார். அதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியோடு ஒரே மேடையில் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார். ஏனோ, தானோ என புகார் அளிக்கும் பழக்கம் திமுகவுக்கு இல்லை.எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆன பிறகு அனைத்து துறைகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது  பொய் புகாராக இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் என்றும்  ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்