அமராவதி அணையில் திறக்கப்பட்ட நீர் கரூரை வந்தடைந்தது..!

Default Image

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது.

குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக கடந்த 13 ஆம் தேதி அணையில் இருந்து விநாடிக்கு இரண்டாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடைமடை பகுதியான கரூர் அருகே செட்டிப்பாளையம் தடுப்பணையை வந்து சேர்ந்தது. அப்பகுதியில் வறண்டு காணப்பட்ட அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதை பார்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அமராவதி ஆற்றங்கரை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். அமராவதி அணையில் இருந்து இன்னும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்