சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு காலை முதலே முக்கிய தலைவர்கள் வந்த வண்ணமே உள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் கருணாநிதியின் உடல் நிலை குறித்து செய்திகள் வர வர கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.ஆனால் மருத்துவமனை நிர்வாகமும் ,திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையிலும்,தொண்டர்கள் மற்றும் அரசியல்கட்சித் தலைவர்களும் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
பின்னர் இன்று காலை முதல் பல்வேறு முக்கிய தலைவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணமே உள்ளனர்.இன்று காலை முதல் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள்,முக.அழகிரி.செல்வி,கனிமொழி,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல தலைவர்கள் வந்த வண்ணமே உள்ளனர் .இதனால் காவேரி மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகின்றது.
இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அங்கு பதற்றம் நிலவியே வருகின்றது. இதேபோல்தான் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் அனுமதி அளிக்கபட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனையில் பதற்றம் நிலவியது.தற்போது இதே நிலை காவேரி மருத்துவனையிலும் நிலவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…