அபிராமிக்கு குண்டர் சட்டமா..? போலீசிடம் வந்த புதிய புகார்..!!

Published by
Dinasuvadu desk

அபிராமிக்கு எதிராக மேலும் போலீசில் புகார்..

 

சென்னை குன்றத்தூரில் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகாரில் அவர் கூறியதாவது ,

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமி, வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, அவரின் நண்பர் சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளார். தற்போது அபிராமியும் சுந்தரமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

sundharama and abirami

இந்தநிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது.

சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார். எனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

8 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

16 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago