அபராதத் தொகை கேபிள் ஆபரேட்டர்களுக்கு தள்ளுபடி என அறிவிப்பு!

Default Image

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனலாக் முறையிலான ஒளிபரப்பிற்கு கேபிள் டிவி கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறிய ஆபரேட்டர்களுக்கு அபராதத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அசல் நிலுவைத் தொகை முழுவதையும் 3 தவணைகளுக்குள் செலுத்திவிட்டால், கடந்த அக்டோபர் மாதம் வரையிலான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். பிப்ரவரி 4ஆம் தேதி வரை நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தாத் தொகை முழுவதையும் செலுத்திய கேபிள் ஆபரேட்டர்களுக்கு அதற்கான சான்று ஆன்லைனில் தெரிவிக்கப்படும் என்று கேபிள் டிவி மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்