அதிர்ச்சி ..!கருணாநிதி மருத்துவனையில் அனுமதி …!நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு !

Default Image

திருவாரூர் அருகே கட்சி நிர்வாகி தமீம்(50) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் கருணாநிதியின் உடல் நிலை குறித்து செய்திகள் வர வர கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.ஆனால் மருத்துவமனை நிர்வாகமும் ,திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையிலும்,தொண்டர்கள் மற்றும் அரசியல்கட்சித் தலைவர்களும் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

பின்னர் இன்று காலை முதல் பல்வேறு முக்கிய தலைவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணமே உள்ளனர்.

இதனால் காவேரி மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகின்றது.இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அங்கு பதற்றம் நிலவியே வருகின்றது.

ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

நேற்று இரவில் இருந்து தற்போது வரை மருத்துவமனையிலும் ,கோபாலபுரத்திலும் தொண்டர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது திருவாரூர் அருகே கட்சி நிர்வாகி தமீம்(50) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார்.இவர் திமுக கட்சியின் உறுப்பினர் ஆவார்.மேலும் இவர் கலைஞரின் தீவிர ரசிகர் ஆவார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் கடந்த மூன்று நாட்களாக அவதி பட்டு வருகிறார்.இதை தாங்க முடியாமல் கட்சி நிர்வாகி தமீம்(50) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்