அதிர்ச்சி..!கருணாநிதி உடல்நலம் ..! தீக்குளித்த நிர்வாகி பலி ..! தொடரும் சோகம் …!

Default Image

சென்னை கொரட்டூரில் திமுக நிர்வாகி குமரன் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 நாட்களுக்கு மேலாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர் .
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
ஆனால்  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்  திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது .மேலும் அவர் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது.தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.எழுந்து வா தலைவா” என்ற தொண்டர்களின் முழக்கங்கள் வீண் போகவில்லை.திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது.திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில்  திமுக நிர்வாகி குமரன் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் திமுக நிர்வாகி குமரன். கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த குமரன் தீக்குளித்துள்ளார்.பின்  60% தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்