கடும் அமளியால் கடந்த 5-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் 11 நாட்களும் முடங்கியுள்ளது.அ.தி.மு.க எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபடுகின்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், அவை சுமூகமாக நடக்காத நிலையில், இந்த நோட்டீஸை விவாதிக்க முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையை முடக்குவதாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அ.தி.மு.க அவையை முடக்குவதாகவும், மத்திய அரசை காப்பாற்ற அ.தி.மு.க. நாடகமாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை அ.தி.மு.க மறுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாக்குறுதி அளிக்கப்படும் வரை அவையை நடத்த விட மாட்டோம் என அ.தி.மு.க எம்.பி.க்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…