அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பின்னர் டிடிவி தினகரன் அணியில் இணைந்து தற்போது இந்த இரு கட்சிகளிலும் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள செந்தில்பாலாஜியை இரு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அவர் அதிமுகவைப் பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது.மேலும் செந்தில்பாலாஜி தன் சட்டையை மாற்றுவது போல 5 முறை கட்சிகளை மாற்றி இருப்பதாகவும் தன் பதவி சுகத்துக்காக கட்சி தாவியுள்ளார் அவரை அடையாளம் காட்டிய அதிமுகவுக்கும் ,அவரை நம்பி வந்த அமமுக நிர்வாகிகளுக்கும் அவர் துரோகம் செய்துள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…