அதிமுகவுடன் இணைவதற்கு பதிலாக கடலில் குதிக்கலாம்- தினகரன்
- தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
- அதிமுகவுடன் இணைவதற்கு பதிலாக கடலில் குதிக்கலாம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிட்டது.
இந்நிலையில் தேர்தல் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், அதிமுகவுடன் இணைவதற்கு பதிலாக கடலில் குதிக்கலாம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என வாக்குகளுக்காக கூறவில்லை.தேர்தலில் வெற்றி பெற்றாலும் இதேதான் .தமிழகத்தில் 75% இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.