சென்னை உயர்நீதிமன்றம்,நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 13 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர் சண்முகம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இளங்கலை மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடம் வசூலிப்பதாக அவர் முறையிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டிருப்பதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்தக் குழு விரைவில் கட்டண நிர்ணயத்தை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக 13 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…