அண்ணா பல்கலை முறைக்கேடு:வெறும் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்..!மேலும் 10000 மாணவர்களும் இதே முறை ..!லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி தகவல்

Published by
Venu

77 மதிப்பெண்களை மறு மதிப்பீட்டில் விதிகளை மீறி மாணவர் ஒருவர்  பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Image result for anna university
கடந்த  ஆகஸ்ட் 1 ஆம் தேதி  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் கண்காணித்து வந்துள்ளார்.

ஒரு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் போலீஸ் பெறப்பட்டதாக விசாரணையில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது. மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.பின்னர்  திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக  விசாரணை நடத்தினர்.
இதில் ஒரு மாணவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் மாணவர் ஒருவர் ஐந்து மதிப்பெண்கள் பெற்ற நிலையில் இரண்டுமுறை மறுமதிப்பீடு செய்ததுள்ளார்.இதன் மூலம் முதலாவது மதிப்பீட்டில் கூடுதலாக 40 மதிப்பெண்களும் ,இரண்டாவது மறுமதிப்பீட்டில் 32 மதிப்பெண்களும் சேர்த்து 77 மதிப்பெண்களை விதிகளை மீறி பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் 32 மதிப்பெண்களை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று பத்தாயிரம் மாணவர்கள் வரை பயன்பெற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

2 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

11 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

32 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago