அங்கன்வாடி பள்ளியில் பயிலும் மாவட்ட ஆட்சியரின் மகள்

Default Image

நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது பெண் குழந்தையை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்திருப்பது, அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஸ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில், தனது இரண்டரை வயது மகளான கீதாஞ்சலியை சேர்த்துள்ளார். பொதுவாக வசதி படைத்தவர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வரும் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரின் குழந்தை அங்கன்வாடியில் சேர்க்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்