அகில இந்திய கூடைப்பந்து போட்டி சென்னை, கேரள அணி வெற்றி…!

Published by
Dinasuvadu desk

கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கம்
அணியும், கேரள மாநில மின்சார வாரிய அணியும் வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி வியாழனன்று (மே 31) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடைபெற்ற பெண்கள் இறுதிப்போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த விளையாட்டில் 59 – 43 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கேரள மாநில மின்சார வாரிய அணி வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை சுங்கம் அணியும், தில்லி இந்தியன் ரயில்வே அணியும் விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 69 -63என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை சுங்கம் அணி தில்லி இந்தியன் ரயில்வே
அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஆண்கள் பிரிவில் வெற்றி
பெற்ற சென்னை சுங்கம் அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாமிடம் பெற்ற தில்லி இந்தியன் ரயில்வே அணிக்கு டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது.

மேலும், பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரள மாநில
மின்சார வாரிய அணிக்கு ரூ.50 ஆயிரம்  மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பை
யும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு, சிறந்த நம்பிக்கைக்கான விளையாட்டு வீராங்கனை விருது தமிழ்நாடு ஜூனியர் அணியைச் சேர்ந்த கிருத்திகாவிற்கு வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஜி.தர்மராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன்,
சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் கூடைப்பந்து கழகத் தலைவரும்
சி.ஆர்.ஐ குழுமங்களின், இணை நிர்வாக இயக்குநருமான ஜீ.செல்வராஜ் ஆகியோர்
கௌரவ விருந்தினராக கலந்துகொண்டனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago