புதுச்சேரி அருகே அக்காவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணமானதாகக் கூறி, உயிரிழந்த பெண்னின் அக்கா கணவர் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. வில்லியனூரை அடுத்த செந்தநத்தம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, அவரது அக்காவின் கணவரான அம்பேத் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அம்மாணவியை அம்பேத் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் அம்பேத்தின் தொல்லைகள் அதிகரித்ததால், மாணவி நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், அம்பேத்தின் வீட்டை அடித்து நொறுக்கினர். தற்கொலை மற்றும் பாலியல் தொந்தரவு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…