புதுச்சேரி அருகே அக்காவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை!

Default Image

புதுச்சேரி அருகே அக்காவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணமானதாகக் கூறி, உயிரிழந்த பெண்னின் அக்கா கணவர் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. வில்லியனூரை அடுத்த செந்தநத்தம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, அவரது அக்காவின் கணவரான அம்பேத் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அம்மாணவியை அம்பேத் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் அம்பேத்தின் தொல்லைகள் அதிகரித்ததால், மாணவி நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், அம்பேத்தின் வீட்டை அடித்து நொறுக்கினர். தற்கொலை மற்றும் பாலியல் தொந்தரவு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்