புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் 2021 ஜனவரி மாதம் வரை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு வீடியோ பதிவு மூலம் பேட்டி அளித்த முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் உச்சகட்டமாக 486 பேர் பாதிக்கப்பட்டனர், தற்போது குறைந்து இன்று 328 பேராக உள்ளது. நம்முடைய மாநிலத்தில் குணமடைந்து சென்றவர்களின் விகிதம் 57% தாண்டியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 106 […]
புதுவையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கிரண்பேடி தடையாக இருப்பதாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் காட்டம். புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாகவும் அங்குள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அடிக்கடி எழுந்து வரக்கூடிய புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த நெருக்கடியின் பெயரில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய […]
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை சாலைகளில் வைக்க தடை விதித்து புதுச்சேரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதிக அளவில் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் சாலைகளில் விநாயகர் சிலைகளை வைத்து பிரசாதம் வழங்கி வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் […]
கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரியில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40% வருமானம் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு இழப்பீட்டை நான்கு மாதமாக தரவில்லை எனவும் 14 சதவீத இழப்பீடு தரவேண்டும் எனவும் 560 கோடி […]
புதுச்சேரியின் எம்.எல்.ஏ ஜெயபால் என்பவருக்கு கொரோனா உறுதியாகியதையடுத்து, அம்மாவட்டத்தின் முதல்வர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரானா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதனால் தமிழகத்தில் சில அமைச்சர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்கள் என அனைவருக்குமே கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டப்பேரவையில் கலந்துகொண்ட என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ […]
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற சட்டப் பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தால் திமுக உறுப்பினர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அ திமுகவினர் வெளிநடப்பு செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், திமுகவினர் சிற்றுண்டி திட்டம் குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்து தெரிவிக்கப்படாமல் இருந்ததால்தான் […]
புதுச்சேரி சுகாதார முகாமுக்கு வந்திருந்த மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடியை எதிர்த்து சகா மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம். கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் பலர் இணைந்து ஒரு சுகாதார முகாம் ஒன்றை நடத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மூத்த மருத்துவர் ஒருவரை லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. எனவே, கிரண் பேடிக்கு எதிராக மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவர்களும் இணைந்து கருப்பு பேட்ஜ் அனைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி […]
புதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து மதவழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இதனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதவழிபாட்டு தலங்களை ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி […]
தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சலால், கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகுள்ளாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் செந்தில்குமரன் என்ற விவசாயி, தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களை பயிரிட்டுள்ளார். இவர் நல்ல விளைச்சலை கண்ட போதிலும், கொரோனா ஊரடங்கால், […]
சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகளால் சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் உள்ள இலவம் பஞ்சு மரங்கள் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனையடுத்து, அந்த பகுதியில் காலையில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள இலவம் பஞ்சு மரங்களில் உள்ள காய்கள் வெடித்து சிதறியதில், சாலை முழுவதும் பஞ்சாக பரவி காணப்பட்டுள்ளது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், கொரோனா […]
புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக இதுவரை […]
சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதனை தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் இருபத்தி ஒரு நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் 850 க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்கள் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் காவல்துறையினர் ஆகியோர் நிச்சயமாக பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பல மருத்துவமனை ஊழியர்கள் இந்த கொரோனா வைரசுக்கு பயந்து தங்களது வேலைக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலும் 54 மேற்பட்ட ஊழியர்கள் வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இருப்பதால் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால் […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா எதிரொலியால், புதுச்சேரி முதர்வர் நாராயணசாமி, நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் போர்க்கால நடவடிக்கையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதுகுறித்து, பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனாவால், அனைத்து பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு […]
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தற்போது தலைவராக உள்ள நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பதால், மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியத்தை கட்சி தலைமை நியமித்துள்ளது. மேலும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவராக ஏற்கனவே பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இது வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 14,962 மாணவர்கள்தேர்வு எழுதுகின்றனர். மேலும் புதுச்சேரியில் 32 மையங்களிலும் , காரைக்காலில் 9 மையங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக, புதுச்சேரி மாநில அரசு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. பின்னர் மோடியின் மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சிக்கிறது என்று தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை […]
தனது உறவினர் வீட்டிற்குள் பின்புறமாக நுழைந்து விளக்கை அனைத்து விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர். வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கிய அக்கம்பக்கத்தினர்.பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாண்டிச்சேரி என்றழைக்கப்படும் புதுச்சேரியில் உள்ள பெரிய கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் முருகன் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 10 -ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் பெண் ஒருவர் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது […]