புதுச்சேரியிலும் அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்!

Default Image

புதுச்சேரியில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று, பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த 5 ரூபாயினை, 7 ரூபாயாக உயர்த்தி, அம்மாநில அரசு அறிவித்தது.
இதற்கு திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பேருந்து கட்டணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையிலான குழு, அறிக்கை அளித்தப்பின் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென உயர்த்திய நிலையில், புதுச்சேரி அரசும் பேருந்து கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு,  இன்று அல்லது நாளையோ வெளியாகும் என தெரிகிறது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்