புதுவையில் நிதி அதிகாரத்தை பரவலாக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது ஒரு கலந்துரையாடல் மட்டுமே. இந்த விதிகளை பின்பற்றியும் செய்யலாம். ஆனால், இது கட்டாயமில்லை. நிதி தொடர்பாக சரியானவற்றை செய்யவும், முறைப்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதில் எங்கே கவர்னர் மாளிகைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது?. அதே நேரத்தில் நிதி தொடர்பான சரியான முடிவுகளுக்கும், தகுதியானவற்றை செய்வதற்கு பொறுப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறேன். நிதி அதிகார பரிசீலனை தொடர்பாக எந்த கோரிக்கையும் அரசிடமிருந்து வரவில்லை. அது வரும்போது அதற்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். சட்டப்படி பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் எனக்கு கட்டாயமாக இருக்கிறது. நிதி அதிகாரங்களை பரவலாக்குவதை செய்யலாம் ( கட்டாயமில்லை) ஆனால் அந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது என்னுடைய பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…