புதுவையில் காண்டிராக்டருக்கு கத்தி குத்து….. !!

Published by
Dinasuvadu desk
முதலியார்பேட்டையில் பெயிண்டிங் காண்டிராக்டரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுவை முதலியார்பேட்டை சுதானாநகரைச் சேர்ந்தவர் சூரி(வயது 42). கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை ஆட்களை வைத்து செய்து வருகிறார். இவரிடம் தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த வேலு, சுரேஷ் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை சூரியை சந்தித்து வேலை ஏதாவது இருக்கிறதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அவர் தற்போது மழை பெய்வதால் வேலை எதுவும் இல்லை என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டார். பின்னர் இருவரும் சூரியின் செல்போனில் தொடர்பு கொண்டு வேலையில்லை என கூறிவிட்டீர்கள், தீபாவளி நேரம் ஏதேனும் முன்பணமாவது தாருங்கள் என கேட்டுள்ளனர்.
அப்போது சூரி தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். உடனே அவர்கள் இருவரும் எங்கள் செல்போனுக்கு ‘ரீ சார்ஜ்’ செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு சூரி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய பின்னர் பலமணி நேரங்கள் ஆகியும் அவர்களது செல்போனில் ‘ரீ சார்ஜ்’ ஆகவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த வேலு, சுரேஷ் ஆகிய 2 பேரும் நேராக சூரியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தகராறு செய்தனர். இதனை பார்த்த சூரியின் மகன் அவர்களை பார்த்து போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் தங்கள் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சூரியின் மகனை குத்த முயற்சி செய்தனர்.

இதனை பார்த்த உடன் சூரி தனது மகன் மீது கத்தி குத்து விழாமல் இருக்க அவர்களை தடுத்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சூரி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, சுரேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago