பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (10.09.2018) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை. அதையொட்டி, புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறது ஆளும் கட்சியான காங்கிரஸ். சிறப்பான முறையில் போராட்டத்தை நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, “அரசுப் பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ நாளைக்கு எது ஓடினாலும் அதை உடைப்போம். ஆனால் எங்கள் மீது எந்த வழக்கும் போடக் கூடாது” என்று நிர்வாகிகள் கூச்சலிட்டனர். அதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி “பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமம் பாராமல் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார். இந்த போராட்டத்திற்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் நாளை ஆட்டோ, பேருந்துகள் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்டோ, பேருந்துகள் இயங்காது என்பதால் பெரும்பான தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…