புதுச்சேரி:
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவைக்கு வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானார் வருகை தருகின்றனர்.
இவர்களில் பல இளம்பெண்கள் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வாடகை மோட்டார் சைக்கிள்களில் ஆண் நண்பர்களுடன் நகரில் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பலர் ஓட்டல்களில் அறைகள் புக்கிங் செய்து தங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒரு வட மாநில பெண் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தார். அந்த பெண் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார்.நேற்று இரவு புதுவையில் பாருடன் கூடிய ஒரு ஓட்டலில் 3 பேரும் மது அருந்தி விட்டு அங்கு நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது புதுவையை சேர்ந்த சில வாலிபர்களும் அந்த பெண்ணுடன் நடனமாடினர். அந்த நேரத்தில் புதுவையை சேர்ந்த வாலிபர்கள் அந்த பெண்ணிடம் செக்ஸ் மீறலில் ஈடுபட்டனர்.இதனை அவருடன் வந்த ஆண் நண்பர்கள் தட்டிக் கேட்ட போது, அவர்களை புதுவை வாலிபர்கள் தாக்கி விரட்டியடித்து விட்டு மீண்டும் அந்த பெண்ணை கட்டி அணைத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியடித்து கொண்டு ஓட்டலில் இருந்து வெளியேறி அந்த வழியாக வந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அழுதபடி முறையிட்டார்.
இதையடுத்து அவரது அறிவுறுத்தலின்படி அந்த பெண் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் சம்பவம் நடந்த ஒட்டலுக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வடமாநில பெண்ணிடம் செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அந்த ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…