கேரளாவில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது.
பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, தடிப்பு போன்றவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. இதனால் இந்த நோய்த்தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை கேரள அரசு ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தெரிவித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநிலத்தில் தற்போது மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…