Categories: இந்தியா

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ‘z’ பிரிவு பாதுகாப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

Z Security: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு.

நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் கூறிய நிலையில், அவருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் உட்பட மொத்தம் 33 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தலைமை தேர்தல் ஆணையர் இல்லத்தில் ஆயுதமேந்திய 10 காவலர்களும், 24 மணி நேரமும் பாதுகாப்பை வழங்க 6 தனி அதிகாரிகளும் (பிஎஸ்ஓக்கள்), அதேசமயம் ஆயுதமேந்திய கமாண்டோக்கள் 12 பேர் 3 ஷிப்டுகள் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு ஷிப்டுக்கு 2 கண்காணிப்பாளர்கள், 3 ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

18 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago