நொய்டா: நொய்டாவில் மேற்கு பகுதியில் பிரபல யூடியூபரான அவினாஷ் ராஜ்புத் பிரதான சாலையின் நடுவே மர்ம நபர்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அவினாஷ் ராஜ்புத் எனும் யூடியூபர், தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் வீடியோவைப் பதிவிட்டு வருபவர், அவருக்கு நேர்ந்த இந்த கசப்பான சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு பேசி இருந்தார். அந்த வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவினாஷ் தனது சகோதரியை பார்க்க நொய்டா சென்று விட்டு திருப்பி வந்த போது கவுர் சிட்டி மாலுக்குச் சென்றுள்ளார், அங்கு சிலர் இவருக்காக காத்திருந்துள்ளனர். வணிக வளாகத்துக்குள் சென்ற யூடியூபர் அவினாஷையும் அவரது நண்பர்களையும் அங்கு இருந்த அந்த மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவரது நண்பர் ஒருவர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் அவினாஷின் காரையும் சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும், அவினாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அந்த 4 பேரும், யூடியூபர் அவினாஷ் ராஜ்புத் தங்கள் சாதியை புண்படுத்தும் வகையில் ஒரு வீடியோவில் பேசினார் என்றும் அதற்காக தான் அவரை தாக்கினோம் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…