ஒரு பிஸ்சாவுக்கு ஆசைப்பட்டு ரூ.95,000 இழந்த இளைஞர்..!

Published by
murugan
  • பெங்களூரில் ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி சோமாட்டோ ஆப்பை பயன்படுத்தி தனக்கு ஒரு பீட்சாவை ஆர்டர் செய்து உள்ளார்.
  • பீட்சா தாமதம் ஆனதால் ஒரு போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்து பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார்.
  • பின்னர் அந்த மோசடி நபர் அனுப்பிய லிங்க் கிளிக் செய்ததும் ஷேக் கணக்கில் இருந்து  ரூ.95,000 எடுத்து கொண்டனர்.

பெங்களூரின் கோரமங்களாவில் வசிக்கும் என்.வி.ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 1.30 மணியளவில், தனது தொலைபேசியில் இருந்த சோமாட்டோ ஆப்பை பயன்படுத்தி தனக்கு ஒரு பீட்சாவை ஆர்டர் செய்து உள்ளார்.

ஆனால் ஒரு மணிநேரத்திற்கு பிறகும் ஷேக் ஆர்டர் செய்த பீட்சா வரவில்லை அதைத் தொடர்ந்து ஷேக், ஒரு வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைத் தேடி அந்த எண்ணிற்கு போன் செய்து  நான் ஆர்டர் செய்த வரவில்லை எனவே பணத்தைத் திரும்பி அனுப்புங்கள் என கூறியுள்ளார்.

வாடிக்கையாளர் சேவை மைய நிர்வாகியாக போல  மோசடியில் ஈடுபட்ட நபர் ஷேக்கிற்கு போன் செய்து உள்ள செல் போனிற்கு ஒரு குறுந்செய்தி வரும் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் உங்களது பணத்தை திரும்ப பெறலாம் என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து ஷேக் போனிற்கு வந்த லிங்க்கை  கிளிக் செய்து உள்ளார்.அவர் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் மோசடியில் ஈடுபட்ட நபர் ஷேக்கின் வங்கி கணக்கின் விபரங்களை கைப்பற்றி விட்டனர்.

பின்னர் அடுத்த சிறிது நேரத்திலேயே ஷேக் கணக்கில் இருந்துரூ.45,000 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் அடுத்த சிறிது நேரத்தில் ரூ.50,000 எடுக்கப்பட்டது இதனால் ஷேக் மடிவாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சோமாட்டோ  நிறுவனம் கூறுகையில் , எங்களிடம் வாடிக்கையாளர் சேவை மைய எண் கிடையாது என்பதை பல்வேறு தகவல் தொடர்பு சேனல்கள் வழியாக தெரிவித்து வருகிறோம்.

நாங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாகவே மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து தருகிறோம். தயவுசெய்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் கூற வேண்டாம் என கூறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

1 hour ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

3 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

4 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

5 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

5 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

6 hours ago