டெல்லியில் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 23 அன்று மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆப்பிள் ஐபோனை இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு கொள்ளையர்கள் துவாரகா செக்டார் 14 பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக புதன்கிழமையன்று இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் வலைவீசி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐபோனை மீட்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, இரண்டு திருடங்களில் ஒருவரின் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக தான் இந்த குற்றத்தை செய்ததாகவும், சில மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதற்காக தாங்கள் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…