கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
டெல்லியில் இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா வைரசால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை இழந்து தவிப்பவர்களுக்கு டெல்லி அரசு நிதி உதவி வழங்கும் என்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை வளர்ப்பது மற்றும் அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,500 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடையவில்லை என்றும் அலட்சியத்திற்கு இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் இருவரையும் இழந்த பல குழந்தைகளை நான் அறிவேன். நான் இன்னும் இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
உங்களை ஒரு அனாதை என்று கருத வேண்டாம். அவர்களின் படிப்பு மற்றும் வளர்ப்பை அரசாங்கம் கவனிக்கும். குழந்தைகளை இழந்த வயதான குடிமக்களையும் நான் அறிவேன். அவர்களின் மகன் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கொரோனாவால் சம்பாதிக்கும் உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கும் அரசாங்கம் உதவும் என்றார்.
அத்தைகைய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினாலும், அவர்களுக்கு கவனிப்பும், பாசமும் தான் தேவை. அருகில் இருப்பவர்கள் அத்தகைய குடும்பங்களின் உறவினர்களை கவனித்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கு நபர்களுக்கு அன்பை செலுத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, அனைவரின் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பிரார்த்தனை செய்கிறேன். கடந்த 10 நாட்களில், டெல்லியின் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இப்போது, மருத்துவமனைகளில் படுக்கைகளைப் பெறுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை, இன்னும் ஒரு விஷயம் ஐ.சி.யூ படுக்கைகள் இன்னும் நிரம்பியுள்ளன.
எனவே, 1,200 புதிய ஐ.சி.யூ படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றிய மக்களுக்கு நன்றி என்றும் ஒவ்வொரு நபரின் பங்களிப்பால் பாதிப்பு சரிவு ஏற்பட்டுள்ளது என்றார். நாங்கள் டெல்லியில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தோம். ஆனால் டெல்லி மக்கள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கினர் என குறிப்பிட்டார்.
மேலும், எல்லோரும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தனர். இன்று எல்லோரும் டெல்லியில் கொரோனா பாதிப்பு எவ்வாறு குறைக்க முடிந்தது என்பதைப் பற்றி பேசுகிறார்கள். டெல்லி மக்களின் ஒழுக்கமான நடத்தை காரணமாக மட்டுமே இது சாத்தியமானது. ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை என தெரிவித்துள்ளார்.
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…