மது போதையில் மியூசிக் ஃபெஸ்டிவலில் நடன மாடிய இளைஞர்கள்!பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published by
Sulai
  • கோவாவில் நடைபெற்று வரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலில்  இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்து இறந்துள்ளனர்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

வடக்கு கோவா மாவட்டத்தின் வாகடோர் கடற்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் EDM திருவிழா நடைபெற்று வரும்.அதே போல் இந்த வருடம் நடைபெற்று வரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

பின்னர் அந்த ஃபெஸ்டிவலில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்ததால், நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென அந்த இடத்தில் சரிந்து விழுந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மாபூசா நகரின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் வரும்வழியிலே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் அந்த இளைஞர்கள் ஆந்திராவை சேர்ந்த சாய் பிரசாத் மற்றும் வெங்கட் என தெரியவந்துள்ளது.இதன் காரணமாக காவல்துறை உயர் அதிகாரி உத்கிரிஷ் பிரசூன் இந்த சம்பவம் மாலை 3 மணியளவில் நிகழ்ந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் இவர்களின் மரணம் மாரடைப்பு அல்லது போதைப்பொருள் அளவு அதிகமாக பயன்படுத்தியதன் விளைவு என எதுவாகவும் இருக்கலாம் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை எங்களால் எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் திருவிழாவின் இணை அமைப்பாளர்களில் ஒருவரான ஷைலேஷ் ஷெட்டி என்பவர் இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது நடந்த நிகழ்வை கண்டு மிகவும் வருந்துவதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago