ஜனநாயகத்தை காப்பாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் – பிரதமர் மோடி

Published by
பாலா கலியமூர்த்தி

ஜனநாயகத்தை காப்பாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இன்று சுவாமி விவேகானந்தாவின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, காலம் செல்ல செல்ல நாடு சுதந்திரமடைந்து வருவதை இன்றும் நாம் காண்கிறோம். சுவாமி விவேகானந்தரின் செல்வாக்கு இன்னும் அப்படியே உள்ளது. பொது சேவை பற்றிய அவரது எண்ணங்கள் இன்று நம் மனதில் இருந்து வருகிறது.

முன்பெல்லாம் அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் சீரழிந்துவிடுவார்கள் என்று கூறுவார்கள். இன்று நேர்மையானவர்களும் அரசியலுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் தங்கள் குடும்பத்தின் இருப்பை நிலைநாட்டி கொள்ளவே சிலர் அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு தேசிய நலனைவிட தன் குடும்பத்தின் ஆதாயம் முக்கியம்.

மேலும், நேர்மை மற்றும் செயல்திறன் இன்றைய அரசியல் களத்தில் முதல் கட்டாய நிபந்தனையாக மாறி வருகிறது. எந்தவொரு பேராசையும் இல்லாமல் அரசியலில் நுழைந்து குடும்ப அரசியலை ஒழிக்குமாறும், ஜனநாயகத்தை காப்பற்றுமாறும் பிரதமர் மோடி நாட்டின் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago