ஆலிவ் ரிட்லி ஆமைகளை காப்பாற்ற தினமும் 6 இளைஞர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவில் உள்ள அஸ்டரங்கா கடற்கரையை முன்பெல்லாம் பார்க்கையில் அழகாக இருக்கும். ஆனால், தற்போது குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், மருத்துவ கழிவுகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தென்பட்டது .இந்த பகுதிகளில் தான் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடுக்கட்டும்.
எனவே அவைகளை பாதுகாக்கும் பொருட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணரான பிச்சிட்ரானந்த பிஸ்வால் அவர்களின் வழிகாட்டலின் படி சந்தோஷ் பெஹெரா, சுமன் பிரதான், சூசந்த் பரிதா, பிரபாகர் பிஸ்வால் மற்றும் தில்லிப் குமார் பிஸ்வால் என்ற 6 இளைஞர்கள் தினமும் 8 மணி நேரம் ஒதுக்கி கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த ஒரு மாத காலத்தில் இவர்கள் கடற்கரையின் 18கி.மீ முழுவதும் 5000 கிலோ கழிவுகளை அகற்றியுள்ளனர். இந்த செயலுக்கு இந்த 6 இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது .
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…