39 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்பதால் இளைஞர் தற்கொலை!

Published by
Rebekal

ஹைதராபாத் மாநிலத்தில் 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை எனும் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக பணியாற்றி வந்துள்ளார். சாரி தான் வேலை பார்க்கக்கூடிய இடத்துக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சற்று மயக்கமுற்ற நிலையில் ஸ்ரீகாந்த் சாரி வீட்டிற்கு வந்துள்ளார். எனவே அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சென்றதும் தனது சகோதரிக்கு போன் செய்த சாரி, தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவரது சகோதரி உடனடியாக கிளம்பி ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது ஏற்கனவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை எடுத்து வீட்டின் உரிமையாளரை அழைத்த அவரது சகோதரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கிடைக்காததால், அவரது சகோதரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு 39 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் அவர் உள்ளதாக தன்னிடம் கூறியதாக அவரது சகோதரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் சரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago