பாகிஸ்தான் வெல்க என்று முழக்கமிட்ட பெண் ! தேசத்துரோக வழக்கில் கைது,14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Published by
Venu

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று  முழக்கமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில்,அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.இந்த பேரணியில் திடீரென பெண் ஒருவர் ஏறி மைக்கில் ,” பாகிஸ்தான் ஜிந்தாபாத்”(பாகிஸ்தான் வெல்க ) என்று முழக்கமிட்டார்.அந்த சமயத்தில் மேடையில் இருந்த ஓவைசி மேடையில் இருந்த அந்த பெண்ணிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சி செய்தார்.இதன் பின்னர் காவல்த்துறையினர் மேடையேறி அந்த பெண்ணை மேடையிலிருந்து கீழே இறக்கினார்கள். இதன் பின் இது குறித்து ஒவைசி கூறுகையில்,பெண்ணுக்கும்  கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான் என்று கூறினார்.

இதன் பின்னர் அந்த பெண்ணை காவல்த்துறையினர் தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.அந்த பெண் மீது 124A, 153A  மற்றும் 153B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு  14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

3 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

4 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

9 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

20 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago