நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
நேற்று நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில்,சோனியா காந்தி,ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீமா ஆஜராகினார்.அப்பொழுது நீதிபதிகள் சுப்ரமணிய சுவாமியை குறுக்கு விசாரணையை செய்ய வழக்கறிஞர் சீமாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து சீமா சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார். அப்பொழுது திடீரென்று சுவாமி,ஆங்கிலத்தில் பேசுங்கள்,இது தான் நீதிமன்றத்தில் மொழி என்று கூறினார்.இதற்கு நீதிபதி கூறுகையில்,ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்ற மொழிதான் என்று கூறினார்.ஹிந்தி தேசிய மொழி என்றும் கூறினார்.சீமா மறுபடியும் ஹிந்தியில் கேள்வி கேட்க,சுவாமி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் கூறுகையில் ,தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்,நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் நான் தமிழன் என்று தெரிவித்தார்.இதன் பின்னர் சீமா ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்.இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…